ஐக்கிய தேசிய கட்சிக்கென பதாகைகளை அச்சிட உதவி வழங்கிய நுகேகொடை பகுதியைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நுகேகொடை பொலிஸ் நிலையத்தில் உள்ளனர் என நுகேகொடை பொலிஸ் உயரதிகாரி தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தற்பொழுது எதுவித தகவலும் வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
