இலங்கையில் நிர்மாணிக் கப்பட்டுள்ள முதலாவது சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் திங்கட்கிழமை (8) திறந்து வைக்கப்படவுள்ளது. 500 கிலோ வோட் மின்சாரத்தை தேசிய மின் தொகுதிக்கு வழங்கும் இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்திற்கு 412 மில்லியன் ரூபா செலவிடப் பட்டுள்ளது.
கொரிய அரசின் நிதி உதவியுடன் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின் உற்பத்தி நிலையத்தை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ திறந்து வைப்பார்.
