புதன், 1 பிப்ரவரி, 2012

இந்திய அமை‌ச்சரு‌க்கு ‌விரு‌ந்து வழங்கி க‌ன்ன‌த்‌தி‌ல் அறை‌ந்த இலங்கை அரசு - வைகோ கண்டனம்

ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கான அ‌திகார‌ப்ப‌கி‌ர்வை இல‌‌ங்கை பாராளும‌‌ன்ற‌ம்‌தா‌ன் முடிவு செ‌ய்யு‌ம் எ‌ன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கூ‌றி‌யிரு‌ப்பது ஏமா‌ற்று வேலை எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ க‌ண்ட‌ன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று (01) வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌கி‌ரு‌ஷ்ணா‌விட‌ம் த‌மிழர்களு‌க்கு அ‌‌திகார‌ப்ப‌கி‌ர்வு என இலங்கை ஜனாதிபதி உறு‌தி அ‌ளி‌த்‌திரு‌ந்தா‌‌ர்.

த‌மிழர்களு‌க்கு அ‌திகார‌ப்ப‌கி‌ர்வு எ‌ன்று கூ‌றி இல‌ங்கை அரசு ஏமா‌ற்று‌கிறது.

இ‌ந்‌தியா - இல‌ங்கை அரசு‌க‌ளி‌ன் கூ‌‌ட்டு ச‌தியை ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் உண‌ர்ந‌்து‌ள்ளன‌ர்.

இ‌ந்‌‌தியா‌விட‌ம் கூ‌றிய உறு‌தி‌க்கு மாறாக அ‌திகார‌‌ப்ப‌கி‌ர்வு ப‌ற்ற‌ி இலங்கை ஜனாதிபதி முர‌ண்பாடாக பே‌சிவரு‌கிறா‌ர்.

இ‌ந்‌திய அமை‌ச்சரு‌க்கு ‌விரு‌ந்து போ‌ட்டு ‌வி‌ட்டு க‌ன்ன‌த்‌தி‌ல் அறை‌ந்து‌ள்ளது இல‌‌ங்கை அரசு எ‌ன்று வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.