வியாழன், 9 பிப்ரவரி, 2012

குடிபோதையில் கணவன் தூக்கம்: ஜெர்மன் பெண்ணுடன் வெளிநபர் கலவி - கைது!

இலங்கைக்கு வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை - திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திக்வெல்ல பகுதி விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையில் அதிகாலை 3 மணியளவில் நபரொருவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் திக்வெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

உபாதை ஒன்றுக்காக சிகிச்சை பெற தான் இலங்கை வந்ததாகவும் சம்பவ தினத்தன்று விடுதியில் தனது கணவர் குடிபோதையில் இருந்தபோது வெளியில் இருந்து வந்த நபர் ஒருவர் தன்னுடன் உறவு கொண்டதாகவும் ஜெர்மன் சுற்றுலா பயணி குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர்தான் தன்னுடன் உறவு கொள்கிறார் என தான் நினைத்தபோதும் சிறிது நேரத்தின் பின் கணவர் உறங்கிக் கொண்டிருப்பதை காணவே கூச்சலிட்டு எழுந்ததாகவும் அப்போது தன்னுடன் இருந்த நபர் தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேபநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.