வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

பிலிப்பைன்ஸுக்கு அருகில் பூகம்பம்' ; பசுபிக் சமுத்திர நாடுகளில் சுனாமி எச்சரிக்கை.

பிலிப்பைன்ஸுக்கு அருகில் சற்றுமுன் 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் பசுபிக் சமுத்திர கரையோர நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் சமார் மாகாணத்தின் கியூவான் நகரிலிருந்து 91 மைல்களுக்கு கிழக்கே இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பூகோள அளவையில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்பூகம்பத்தையடுத்து பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, தாய்வான், ஜப்பான், அமெரிக்கா ஆகிய சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்பூகம்பத்தினால் இலங்கைக்கு  ஆபத்து எதுவும் இல்லை என இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.