திங்கள், 10 செப்டம்பர், 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 2 படகுகள் கடற்படையினரால் மறிப்பு.(படங்கள் இணைப்பு)

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட “தெரேஷ் நிலூஷா” மற்றும் “மங்கள” ஆகிய 2 படகுகளை, திருகோணமலைக் கடற்பரப்பில் கடற்படையினர் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 08) தடுத்து நிறுத்தியதுடன் அதில் இருந்து 146 பேரை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 107 ஆண்களும் 16 பெண்களும் 23 குழந்தைகளும் அடங்குகின்றனர்.இவர்கள் மேலதிக விசாரனைகளுக்காக திருகோணமலை புலனாய்வு துறையினரிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.