ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ஆஸி. செல்ல முற்பட்ட 95 இலங்கையர்களும் வழியனுப்பிய 13 பேரும் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 97 பேர் இந்தியாவின் கர்நாடகா மாநிலப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 95 இலங்கை அகதிகள் உள்ளடங்குவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 22 பெண்களும், 6 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை, இந்த அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பணம் பறித்த 13 சந்தேகநபர்களையும் கர்நாடகா மாநிலப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.