யாழ்.மாவட்டத்தில் பருவமடையாத சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து இருப்பதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பொரகரா தெரிவித்தார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பருத்தித்துறை மாலியன்பாடு பகுதியில் பருவமடையாத சிறுமி ஒருவரை 25 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படத்தியுள்ளதாக அவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை 9 வயது நிரம்பிய கடைக்குச் சென்ற சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முனைந்த கடை ஊழியர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் வடமராட்சிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
கடையில் பொருட்கள் வாங்கச்சென்ற 09 வயதுச் சிறுமியுடன் தவறான முறையில் நடக்க முற்பட்ட கடை ஊழியரான 22 வயது இளைஞர் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடிப் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடந்த 09 ம் திகதி இடம் பெற்றதாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெவித்துள்ளார்.
சந்தேக நபர் பொலிசாரினால் பருத்திதுறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுளள்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(அத தெரண நிருபர்)
யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பருத்தித்துறை மாலியன்பாடு பகுதியில் பருவமடையாத சிறுமி ஒருவரை 25 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படத்தியுள்ளதாக அவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை 9 வயது நிரம்பிய கடைக்குச் சென்ற சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முனைந்த கடை ஊழியர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் வடமராட்சிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
கடையில் பொருட்கள் வாங்கச்சென்ற 09 வயதுச் சிறுமியுடன் தவறான முறையில் நடக்க முற்பட்ட கடை ஊழியரான 22 வயது இளைஞர் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடிப் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடந்த 09 ம் திகதி இடம் பெற்றதாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெவித்துள்ளார்.
சந்தேக நபர் பொலிசாரினால் பருத்திதுறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுளள்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(அத தெரண நிருபர்)